தர்மபுரி மாவட்டத்தில் அமைச்சர் பழனியப்பன் முன்னிலையில் அதிமுவில் சேர்ந்த 175 பேர்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 175 பேர் அமைச்சர் பி. பழனியப்பன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் நாகமரை ஊராட்சியைச் சேர்ந்த 150 பேர், பென்னாகரம் ஒன்றியம் எட்டிபர்வதனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட எட்டிக்குட்டையைச் சேர்ந்த 25 பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகினர்.
இதையடுத்து அவர்கள் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

175 பேர் அதிமுகவில் இணைந்த நிகழ்ச்சி தர்மபுரி மற்றும் ஏரியூர் ஆகிய இடங்களில் உள்ள அதிமுக அலுவலகங்களில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, மாவட்ட அவை தலைவர் நாகராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஒன்றிய செயலாளர்கள் வேலுமணி, தனராஜ், ஒன்றியக்குழு தலைவர் மதியழகன் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications