மேட்டூர் அரசு மருத்துவமனையில்ர் அரசு மருத்துவமனையில் ஆபரேசன் செய்த 20 பேருக்கு பார்வை பறிபோனது
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் பார்வை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 20 பேருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ செம்மலை மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
மேட்டூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கண் அருவை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பலரும் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் பலருக்கு கண்ணில் எரிச்சல் மற்றும் புண் ஏற்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனைக்குச் சென்ற நோயாளிகள், டாக்டர்களிடம் முறையிட்டுள்ளனர். இதன் பின்னர் டாக்டர்கள் சில மருந்துகள் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர்களில் 20 பேருக்கு கண்ணில் புண்கள் அதிகமானது. இதனால், அவர்களது பார்வைத் திறன் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று காலை பாதிக்கப்பட்ட 20 பேரும், மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அங்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை. பதட்டம் நிலவியதுடன், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர்களில் 10 பேர் கோவையிலும், மூன்று பேர் சேலத்திலும், மீதம் உள்ளவர்கள் பிற நகரங்களிலும் உள்ள மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக சேலத்தில் இருந்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
இதுகுறித்து அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டபோது, "அறுவை சிகிச்சை செய்தபின் ஏற்படும் வழக்கமான விளைவுகள் தான் என்றும் சில நாட்களில் சரியாகிவிடும்" என்றும் விளக்கமளித்து உள்ளனர். பாதிக்கப்பட்ட 20 பேரையும் சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பாதிப்பு அறுவை சிகிச்சையினால் ஏற்பட்டதுதானா என்பது குறித்து தமிழக அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே மேட்டூர் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ செம்மலை ஆய்வு செய்து பார்வை பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை செம்மலை கேட்டறிந்தார். மேட்டூர் அரசு மருத்துவமனையில் பார்வை பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஆய்வு செய்ய குழு என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் இருந்து இன்று மாலை உயர்மட்ட ஆய்வுக்குழு சேலம் செல்ல உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications