18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: மூன்றாவது நீதிபதியை நியமிக்கப்போகும் மூத்த நீதிபதி யார் தெரியுமா?
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை வழங்க போகும் மூன்றாவது நீதிபதியை, மூத்த மூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் நியமிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை வழங்க போகும் மூன்றாவது நீதிபதியை, மூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் நியமிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இரண்டு வெவ்வேறு தீர்ப்புகள் வெளியாகி உள்ளது.

தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரி என்று தலைமை வழக்கறிஞர் இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தவறு என்று நீதிபதி சுந்தர் தெரிவித்துள்ளார்.
இதனால் வழக்கு தீர்ப்பு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி கொடுக்கும் தீர்ப்பை பொறுத்தே ஆட்சி மாற்றம், ஆட்சி தொடர்ச்சி எல்லாம் முடிவாகும். தமிழக அரசியலின் அடுத்த கட்ட நடவடிக்கை எல்லாம் இந்த மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பிலேயே உள்ளது.
இந்த வழக்கின் மூன்றாவது நீதிபதி யார் என்று இன்னும் கூறப்படவில்லை. இதனால் அவரை நியமிக்க இன்னும் இரண்டு வார காலமாவது ஆகும். மூன்றாவது நீதிபதியை, மூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் நியமிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இருக்கும் இரண்டாவது மூத்த நீதிபதி இவர்தான்.
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமிக்கப்படும் முன் மூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ்தான், இடைக்கால தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்தார். இதற்கு முன் இவர் பெங்களூர், அலஹாபாத் ஆகிய நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
கடந்த 2016ல் இருந்து இவர் சென்னை நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். மிகவும் மூத்த நீதிபதி இவர் என்பதால், இவருக்கு மூன்றாவது நீதிபதியை நியமிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவர் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்த போது அரசு எடுக்கும் சில முடிவுகளுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதற்கு ஏற்றபடி அவர் அரசுக்கு எதிராக பலமுறை தீர்ப்பு வழங்கியும் உள்ளார். கர்நாடகாவில் இருந்த போது, பெங்களூர் மாநகராட்சிக்கு எதிராகவும், அப்போதைய அரசுக்கு எதிராகவும் பல முறை தீர்ப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளிப்படையாகவே சில முறை பேட்டியளித்துள்ளார். இவர்தான் தற்போது மூன்றாவது நீதிபதியை நியமிக்க உள்ளார்.
-
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications