ஓட்டுக்கு பணம் கொடுக்க திமுக, அதிமுக திட்டம்: வைகோ புகார்
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: தேர்தல் பிரசாம் முடிவுக்கு வரும் 22ந் தேதி மாலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க இரண்டு கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ 'திடுக்' தகவலை வெளியிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று பிரசாரம் மேற்கொண்டபோது வைகோ கூறியதாவது:
1972-க்கு பிறகு நடந்த தேர்தல்களில் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கே தமிழக மக்கள் மாறி, மாறி வாக்களித்து வந்துள்ளனர். அப்போது வேறு கட்சிகள் பலம் பெறவில்லை.
தற்போது தி.மு.க-அ.தி.மு.க. ஆகியவற்றிற்கு மாற்றாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாகும். 39 தொகுதிகளிலும் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றால்தான் தமிழக பிரச்னை தீரும்.
காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி்க்கு வந்தால் 5 கோடி வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு வைகோ பேசினார்.












Click it and Unblock the Notifications