கன்னத்தில் அறைந்த திண்டுக்கல் ஆசிரியர்.. அரளி விதை அரைத்து குடித்த 2 மாணவிகள்.. தொடரும் சிகிச்சை
ஆசிரியை அடித்ததால் 2 மாணவிகள் விஷம் குடித்தனர்.
Recommended Video

திண்டுக்கல்: ஆசிரியர் திட்டிவிட்டார் என்பதற்காக 2 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்கள் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் கொடைரோடு மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டோல்கேட் அருகே உள்ள பகுதி கொழிஞ்சிப்பட்டி. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வருபவர் கவுசல்யா, மற்றும் அங்காளஈஸ்வரி.

கன்னத்தில் அடித்தார்
இவர்கள் இருவரும் 10-ம் வகுப்பு மாணவிகள். 10-ம் வகுப்புக்கு நடத்தப்பட்ட வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் இவர்கள் இருவரும் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளனர். இதனால் அவர்களின் தமிழ் ஆசிரியர் மாணவிகளை வன்மையாக திட்டியதுடன், கன்னத்தில் அறைந்துள்ளார்.

அரளிவிதை சாப்பிட்டனர்
இதனால் மாணவிகள் இருவரும் மனம் நொந்து போயினர். வகுப்புக்குள்ளே நீண்ட நேரம் உட்கார்ந்து அழுதனர். மற்ற மாணவிகள் முன்பு கன்னத்தில் அறைந்ததால் அவமானமும் அடைந்தனர். அதனால் உயிரை போக்கிக் கொள்ள முடிவெடுத்த இருவரும் காட்டு பகுதிக்கு சென்று அங்கிருந்த அரளி விரையை அரைத்து சாப்பிட்டனர்.

சாலை ஓரம் மாணவிகள்
பெண் பிள்ளைகள் இருவரும் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் தேடி வந்தனர். அப்போது இரு மாணவிகளும் சாலை ஓரத்தில் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனால் அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்த பெற்றோர், அவர்களை உடனடியாக கொடைரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

விசாரணை ஆரம்பம்
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காட்டுத் தீயென பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி நிர்வாகம் பள்ளியிலும், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடமும் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications