உள்ளாடைக்குள் ரூ.85 லட்சம் தங்கம்: சென்னை விமான நிலையத்தில் பெண் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில், 65 வயது பெண்மணியிடம் இருந்து 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது அந்த பெண்மணி தனது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து தெரியவந்தது.
இதையடுத்து அப்பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், கடத்தல்கார பெண்மணி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கிரேஸ் செல்வராணி (65) என்பது தெரியவந்தது.
இவர் கொண்டுவந்த தங்கம் 2.5 கிலோ எடை கொண்டது. இதன் மதிப்பு ரூ.85 லட்சம். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications