"தனிமையில் இருக்கலாம்" காதலியை அழைத்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய ஆட்டோ டிரைவர்..பரபரத்த தென்காசி
தென்காசியில் காதலியை பலாத்காரம் செய்ததோடு தன் நண்பர்கள் 2 பேருக்கும் விருந்தாக்கிய ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி: தென்காசியில் காதலித்த இளம்பெண்ணை கற்பழித்ததோடு தனது நண்பர்கள் 2 பேருக்கும் விருந்தாக்கிய ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியில் உள்ள தைக்கா தெருவைச் சேர்ந்த நபர் சுடலைமுத்து. இவரது மகன் மாதவன். ஆட்டோ டிரைவர்.
மாதவன் தனது ஊருக்கு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் இவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியும் வந்துள்ளனர்.

தென்காசி சிற்றாற்று பாலம்
அவ்வப்போது மாதவன் தனது காதலியை வெளியில் அழைத்தும் சென்று வந்து இருக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்றும் காதலியை வெளியில் செல்லலாம் என்று மாதவன் அழைத்து இருக்கிறார். காதலன் தானே கூப்பிடுகிறார் என்று இளம்பெண்ணும் நம்பி மாதவன் கூறியபடி சென்றுள்ளார். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்த மாதவன், இளம்பெண்ணை தென்காசி சிற்றாற்று பாலத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

நண்பர்களின் ஆசைக்கு இணங்குமாறு
பேசிக்கொண்டு இருக்கலாம் என்று கூறி பாலத்திற்கு அடியில் இளம்பெண்ணை அழைத்துச்சென்ற மாதவன், திடீரென பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி தனது நண்பர்கள் இருவருக்கும் விருந்தாக்க கொடூர எண்ணம் மாதவனுக்கு தோன்றியதாம். தனது நண்பர்களையும் பாலத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். நண்பர்கள் இருவர் வந்ததும் அவர்களின் ஆசைக்கும் இணங்க வேண்டும் என்று இளம்பெண்ணை வற்புறுத்தியிருக்கிறார்.

கூட்டு பலாத்காரம்
தொடர்ந்து மாதவனின் நண்பர்கள் 2 பேரும் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். காதலன் தானே அழைக்கிறான் என்ற நம்பிக்கையில் வந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடூரங்களை எண்ணி மனம் வெதும்பியுள்ளார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

காதலன் உள்பட 2 பேர் கைது
இளம்பெண்ணின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் மாதவன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் என மூன்று பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இதில் காதலன் மாதவன் மற்றும் மாதவனின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்ற நபரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மாதவனின் மற்றொரு நண்பரை தேடி வருகின்றனர். தான் காதலித்த பெண்ணையே பாலியல் பலாத்காரம் செய்ததோடு நண்பர்களுக்கும் விருந்தாக்கிய சம்பவம் தென்காசி சுற்று வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications