கூலிப்படையுடன் கூட்டு... ரூ.4 கோடி வழிப்பறி கொள்ளையில் பதுங்கியிருந்த 2 போலீசாரும் சிக்கினர்!
கோவை: கேரளா கூலிப்படையுடன் கூட்டணி அமைத்து ரூ4 கோடி ஹவாலா பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் தலைமறைவாக பதுங்கியிருந்த கரூர் போலீசார் சரவணன் மற்றும் தர்மேந்திரா இருவரும் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைத்து கோவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மதுக்கரை அருகே கடந்த மாதம் 25-ந் தேதி சென்னையில் இருந்து கேரள மாநிலம் மலப்புரம் நோக்கி ஒரு கார் சென்றது. அந்த காரை போலீஸ் உடையில் இருந்த மர்ம நபர்கள் வழிமறித்து காரில் வந்தவர்களை இறக்கிவிட்டு காரை சோதனையிடுவது போல் நடித்து காரை கடத்திச் சென்றனர்.
ரூ4 கோடி பணத்துடன் கார் கடத்தப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் காரின் சொந்தக்காரரான கேரள மாநிலம் மலப்புரம் தங்க நகைக் கடை உரிமையாளர் அன்வர் சதா தம்முடைய கார் மட்டும் கடத்தப்பட்டதாக கோவை மாவட்ட போலீஸாரிடம் புகார் அளித்தார்.

பாலக்காட்டில் கார் மீட்பு
காரில் இருந்தது ஹவாலா பணம் என்பதால் அதை மறைத்தே புகார் தரப்பட்டிருக்கிறது என்ற சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக 4 தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி 27-ந் தேதி பாலக்காடு அருகே நின்ற காரை மீட்டனர்.

போலீசுக்கும் தொடர்பு
மேலும் மலப்புரத்தைச் சேர்ந்த சுதீர், சுபாஷ், ஜாகீர் ஆகியோரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் காரையும் அதில் இருந்த ரூ4 கோடியையும் கொள்ளையடித்தில் தமிழக போலீசுக்கும் பங்கிருப்பது தெரியவந்தது.

ஆளுக்கு பாதி...
அதாவது கொள்ளையடித்ததில் ரூ 2 கோடியை தாங்கள் எடுத்துக்கொண்டு, மீதம் ரூ 2 கோடியை உடந்தையாக இருந்த கரூர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப் இன்ஸ்பெக்டர் சரவணன், ஹெட் கான்ஸ்டபிள் தர்மேந்திரன் ஆகியோரிடம் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் கைது
இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக தப்பி ஓடிய போலீசார் சரவணன் மற்றும் தர்மேந்திரன் இன்று கரூரில் சிக்கினர். இருவரிடமும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்து கோவை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உயர் அதிகாரி
இந்த ரூ4 கோடி ஹவாலா கொள்ளைக்கு உடந்தையாக இருந்தது தென்மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி என்பதும் தெரியவந்துள்ளது. அந்த உயர் அதிகாரி குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications