வங்கிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை... இதான் ஞாயிற்றுக்கிழமையும் வேலை பார்க்கும் லட்சணமா?
சென்னை: டிசம்பர் 30 ம் தேதிவரை வங்கிகளுக்கு விடுமுறையே கிடையாது, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வங்கி இயங்கும் என்றெல்லாம் மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், இன்றும் நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பின்படி தமிழகத்தில் அனைத்து வங்கிக் கிளைகளுக்கும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஒரு மாதத்தில் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமையன்று விடுமுறையாகவும், ஒன்றாவது, மூன்றாவது சனிக்கிழமைகள் வேலை நாளாகவும் வங்கிக் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
அதன்படி, நான்காவது சனிக்கிழமையான நவம்பர் 26-ஆம் தேதியன்று வங்கிக் கிளைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் வங்கிக் கிளைகள் அனைத்தும் திங்கள்கிழமையன்றே (நவ.28) செயல்படும்.
வங்கிக் கிளைகள், ரிசர்வ் வங்கி அலுவலகம் ஆகியன இரண்டு நாள்கள் செயல்படாது என்பதால் ஏ.டி.எம். மையங்கள் முற்றிலும் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே நாட்டில் உள்ள 99 சதவீத ஏடிஎம்கள் செயல்படாமல்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications