விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து- 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: விருதுநகர் அருகே காளிச்சேரியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் கருகி பலியாகி உள்ளனர்.
காளிச்சேரியில் ரமேஷ் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அனுமதியின்றி முறைகேடாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று இங்கு வந்தது. இந்த நிலையில் இன்று பகல் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் பட்டாசுகள் தயாரித்துக் கொண்டிருந்த 2 தொழிலாளர்கள் கருகி உயிரிழந்தனர். இடிபாடுகளில் வேறு யாரும் சிக்கி உள்ளனரா என தீயணைப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications