50 வயதில் கர்ப்பிணிகளாம்... சென்னை துணிக்கடையில் பட்டுப் புடவையை ஆட்டையப் போட்ட பெண்கள் கைது!
சென்னை: சென்னையில் கர்ப்பிணி போல நடித்து கடைகளில் நூதனமான முறையில் கொள்ளை அடிக்கும் பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புரசைவாக்கத்தில் பிரபல துணிக்கடையில் நேற்று முன்தினம் 2 பெண்கள் துணி எடுப்பதற்காக வந்தனர். அவர்கள் இருவரும் பட்டுச்சேலை பிரிவில் சேலை எடுப்பது போல நடித்தனர். பின்னர் சேலை எதுவும் எடுக்காமல் கடையை விட்டு வெளியேறினார்கள்.

சேலை எடுக்க கடைக்கு வரும்போது சாதாரணமாக வந்த அந்த பெண்கள் கடையை விட்டு வெளியேறும்போது வயிறு பெரிதான நிலையில் கர்ப்பிணி பெண்கள் போல சென்றனர். இதை கடை ஊழியர்கள் கண்டுபிடித்து விட்டனர். உடனடியாக அந்த பெண்களை பிடித்து சோதனை போட்டனர்.
நாங்கள் கர்ப்பிணிகள், எங்களை சோதனை போட்டு அவமானப்படுத்துவதா என்று அந்த பெண்கள் கலாட்டாவில் ஈடுபட்டனர். இதையும் மீறி அந்த பெண்களிடம் கடை ஊழியர்கள் சோதனை போட்டபோது, அவர்கள் அடி வயிற்றில் சேலைகளை சுற்றி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த பெண்கள் இருவரோடு, ஆண் ஒருவரையும் பிடித்து கீழ்ப்பாக்கம் போலீசில் துணிக்கடை ஊழியர்கள் ஒப்படைத்தனர்.
கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் விசாரணை நடத்தினார். இன்ஸ்பெக்டரிடமும் அந்த பெண்கள் அழுது புரண்டு நாடகமாடினார்கள். நாங்கள் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சேலைகள் கீழே விழுந்து கிடந்தது, அதை நாங்கள் எடுத்துக்கொடுத்தோம், அதை தவறாக புரிந்து கொண்டு எங்களுக்கு திருட்டு பட்டம் கட்டிவிட்டனர் என்று அந்த பெண்கள் தெரிவித்தனர்.
மேலும் அந்த பெண்களை விடுவிக்கும்படி சிபாரிசு வந்தது. இதனால் அவர்களை கைது செய்யாமல் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில், குறிப்பிட்ட துணிக்கடையில் உள்ள கேமராவை ஆய்வு செய்தபோது அதில் குறிப்பிட்ட அந்த பெண்கள் சேலைகளை திருடி அடி வயிற்றில் மறைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதை ஆதாரமாக வைத்து அந்த பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்கள் இருவரும் கர்ப்பிணி போல நாடகமாடி நகைகடையில் நகை திருடுவதையும், துணிக்கடையில் சேலைகள் திருடுவதையும் தொழிலாக செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் இருவரும் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் பெயர் செல்வி என்ற அழகுராணி. இன்னொருவர் பெயர் முத்துபாண்டியம்மாள். அவர்களுடன் பிடிபட்ட ஆணின் பெயர் பூம்பதுரை. இவர்களிடம் இருந்து 5 பட்டுப்புடவைகள் மீட்கப்பட்டன. இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டதாக போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தனர்.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்












Click it and Unblock the Notifications