மதுரை: போலீஸ் என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை!
மதுரையில் இரு ரவுடிகளை போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றது.
Recommended Video

மதுரை: மதுரையில் கொலை, திருட்டு, வழிப்பறி ஆகிய வழக்குகளில் தொடர்புடைய இரு ரவுடிகளை செல்லூர் போலீஸார் என்கவுட்டரில் சுட்டுக் கொன்றனர்.
முத்து இருளாண்டி, சகுனி கார்த்தி ஆகிய இருவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளனர். இவர்களை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில் மதுரை- திண்டுக்கல் சாலையில் உள்ள சிக்கந்தர் சாவடியில் இருளாண்டி, மாயக்கண்ணன், சகுனி கார்த்தி உள்ளிட்ட 5 ரவுடிகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இவர்களை போலீஸார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

ரவுடிகள் துப்பாக்கிச் சூடு
இதையடுத்து அவர்களை பிடிக்க இன்று செல்லூர் போலீஸார் சென்றனர். அப்போது அங்கிருந்த 5 பேரும் போலீஸாரை நோக்கி சுட்டனர்.

திட்டமிடப்படவில்லை
இதனால் தற்காப்பு நடவடிக்கைக்காக போலீஸார் திருப்பி சுட்டனர். இதில் இருளாண்டி, கார்த்தி ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது திட்டமிட்டப்படாத ஒரு என்கவுன்ட்டர் என்று போலீஸ் தெரிவித்தனர். மாயக்கண்ணன் லேசாக காயமடைந்து தப்பிவிட்டார். மேலும் இரு ரவுடிகளை போலீஸார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

மருத்துவ பரிசோதனை
மேலும் இவர்கள் 5 பேரும் மிக முக்கியமான நபரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இருவரின் உடல்களை மீட்ட போலீஸார் மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால் மதுரையில் பரபரப்பு நிலவி வருகிறது.

வழக்குகள்
சுட்டுக் கொல்லப்பட்ட இருளாண்டி சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர். இவர் மீது 10 கொலை வழக்குகள் உள்ளன. தொழிலதிபர்களை கடத்தி பணம் பறிப்பதே இவரது தொழிலாகும். கடந்த மாதம் சென்னையில் ஒரே இடத்தில் 100 ரவுடிகளை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications