17 வயசு சிறுமிகள்.. 2 பேர்.. மாட்டிக் கொண்ட தானிஷ்.. மின்னல் வேக சேஸ்.. சென்னையில் பரபரப்பு!
இளைஞரிடம் செல்போனை வழிப்பறி செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

சென்னை: வேற வழியில்லை.. நம்பிதான் ஆகணும்.. சென்னை வேப்பேரியில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கு.
வாணியம்பாடியை சேர்ந்தவர் தானிஷ் என்ற 18 வயது இளைஞர். இவர் ஒரு மையத்தில் பயிற்சி பெறுவதற்காக போன மாதம் சென்னை வந்தார். வேப்பேரி பகுதியில் தங்கியிருந்து மையத்துக்கு சென்று படித்து வருகிறார்.
[ நீதிபதிகள் லீவு போடக்கூடாது.. சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவு!! ]

17 வயது சிறுமிகள்
இந்நிலையில் நேற்றிரவு தானிஷ்-க்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதனால் 10 மணிக்கு மாத்திரை வாங்க கடைக்கு போனார். அப்போது திடீரென ஒரு பைக் தானிஸ் அருகில் வந்து நின்றது. அந்த பைக்கில் இரு சிறுமிகள்... இரண்டு பேருக்குமே 17 வயதிருக்கும்... மாடர்ன் டிரஸ் போட்டு பணக்கார வீட்டு பிள்ளைகள் போல இருந்தார்கள்.

செல்போன் வேணும்
குறுக்கில் வந்து பைக்கை நிறுத்தவும் தானிஷ் கொஞ்சம் ஒதுங்கி போனார். அப்போது அந்த சிறுமிகள்.. "எக்ஸ் க்யூஸ்மி" என்று கூப்பிட்டனர். தன்னை தான் கூப்பிடுகிறார்கள் என்று நினைத்த தானிஷ், என்ன வேண்டும் என்றார். உடனே சிறுமிகள், "இங்க ஒருத்தரை பார்க்க வந்தோம்.. செல்போன் கொண்டுவர ரெண்டு பேருமே மறந்துட்டோம். உங்க செல் கொஞ்சம் தர்றீங்களா? பேசிட்டு உடனே தந்திடறோம்" என்றனர்.

பைக்கில் பறந்தனர்
ராத்திரி 10 மணிக்கு இரு சிறு பெண்கள் இடம் தெரியாமல் சிக்கி கொண்டார்களே என்று பரிதாப்பட்ட தானிஷ் தன் ஆண்ட்ராயிடு செல்போனை அவர்களிடம் கொடுத்தார். முடிந்தது... அடுத்த கணமே பைக்கை ஸ்டார்ட் செய்தார்கள் இரு பெண்களும். இதனால் அதிர்ச்சியடைந்த தானிஷ் சத்தம்போட்டு கத்தினார். அதற்குள் அந்த பெண்கள் பைக்கில் பறந்தனர்.

விரட்டி பிடித்த பொதுமக்கள்
தானிஷ் கத்துவதையும், பெண்கள் பைக்கில் பறப்பதையும் கண்ட மற்ற வாகன ஓட்டிகள் அவர்களை துரத்திக் கொண்டே சென்றனர். அந்த பெண்களை லேசில் பிடிக்க முடியவில்லை. சந்து பொந்தெல்லாம் பைக்கை ஓட்டிக்கொண்டு பின்னால் துரத்தி வருபவர்களை திணறடித்தார்... சுற்ற வைத்தார்கள்.. கடைசியில் பொதுமக்கள் உதவியுடன் இரு பெண்களையும் பிடித்து பெரியமேடு போலீசில் ஒப்படைத்தார்கள்.

இரு பெண்களும் கைது
அப்போது போலீசார் விசாரணை நடத்தி அவர்களது பெற்றோரை ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர். பெண்கள் இருவரும் வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அபேஸ் செய்வதும், ஆட்டைய போடுவதும் ஆண்கள்தான் என்றிருந்த காலம் போய் பெண்கள் அதுவும் சிறுமிகள் செய்த இந்த காரியம் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் சென்னை மக்களுக்கு அளித்துள்ளது.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications