நாகர்கோவிலில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 20 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
மீன் வலை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர்களை சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே தனியார் நிறுவனத்தில் கொத்தடிமைகளாக பணியமர்த்தபட்ட தமிழகம், பீஹார் மற்றும் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த குழந்தை தொழிலாளர்கள் உட்பட 20 பேரை குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அனந்தநாடார் குடியிருப்பு பகுதியில் செல்லஸ் என்பவர் ஆப்பிள் நெட் என்ற பெயரில் மீன் வலை உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, கொடுமைபடுத்துவதாக மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நேற்று அங்கு சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது தமிழகத்தை சேர்ந்த ஏழு பேரும், பீகார் மற்றும் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 13 பேரும் அங்கு கொத்தடிமைகளாக பணியில் அமர்த்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஆறு பேர் குழந்தை தொழிலாளர்கள் என தெரிய வந்தது. மேலும் இவர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கபடாமல் கொடுமைப்படுத்தி வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இவர்களை மீட்ட அதிகாரிகள் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட தனியார் வலை தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், இதில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்த பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேலும் இங்குள்ள தனியார் நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு அங்கு பணி புரியும் குழைந்தை தொழிலாளர்களை மீட்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications