வருசநாடு அருகே பஞ்சந்தாங்கி மலையில் 20 மணிநேரம் போராடி காட்டுத்தீ அணைப்பு: சதுரகிரி சென்ற பக்தர்கள்
சதுரகிரிமலையில் பற்றி எரிந்த காட்டு தீ அணைக்கப்பட்டது
வருசநாடு: வருசநாடு அருகே பஞ்சந்தாங்கி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயை சுமார் 20 மணிநேர போராட்டத்திற்கு பின்பு வனத்துறையினர் அணைத்தனர். இதில் 2 ஹெக்டேர் பரப்பிலான மரங்கள் எரிந்து நாசமானது.
மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே ஆறாவது பீட்டில் உள்ள பெருமாள் மொட்டை மலையின் கீழ்ப் பகுதியில் நேற்று அதிகாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது

காற்றின் வேகத்தால் தீ அருகில் உள்ள பஞ்சந்தாங்கி மலைப்பகுதிக்கும் பரவியது. தகவலறிந்த வருசநாடு வனத்துறையினர் 20 பேர், பஞ்சந்தாங்கி மலைப்பகுதிக்கு சென்று காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 20 மணிநேர போராட்டத்திற்கு பின்பு காட்டுத் தீயை நேற்று காலையில் வனத்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். அதுமட்டும் அல்லாமல் திடீர் மழை பெய்ததால், மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.இந்த தீ விபத்தில் சுமார் 2 ஹெக்டேர் பரப்பளவிலான மரங்கள் எரிந்து நாசமானது.
இதனிடையே, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதத்திற்கு 4 நாட்கள் அதாவது கடந்த வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் காட்டுதீ பரவிய காரணத்தினால், மலையில் ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏற்கெனவே மலையில் ஏறிய பக்தர்கள் வனப்பகுதியின் வழியே இறங்க அனுமதிக்கப்பட்டனர்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், 'பஞ்சந்தாங்கி மலைப்பகுதியில் மரம் கடத்தல், வனவிலங்குகள் வேட்டையாடுதல், மணல் கடத்தல் போன்றவை நடக்கின்றன. இதில் ஈடுபடும் மர்மநபர்கள் ஒரு பகுதியில் தீ வைத்து வனத்துறையின் கவனத்தை திசை திருப்பி விட்டு, மற்றொரு பகுதியில் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இத்தகைய சமூகவிரோதிகளை கண்டறிந்து வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications