2018 தமிழக பட்ஜெட்: பேரிடர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம்
தமிழக அரசு பட்ஜெட்டில் இந்த வருடம் பேரிடர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசு பட்ஜெட்டில் இந்த வருடம் பேரிடர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழக சட்ட சபையில் 2018 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

தமிழகத்தில் முக்கியமான திட்டங்கள் பலவற்றிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பேரிடர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
3 ஆயிரம் பேருந்துகள் கூடுதலாக வாங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ரூ217 கோடியில் காவல்துறைக்கு கட்டிடங்கள் கட்டப்பட இருக்கிறது.
பேரிடர் நிவாரண நிதியத்துக்கு ரூ786 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வறுமை ஒழிப்புக்கு ரூ519 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications