சிங்களப் படையின் தொடர் அட்டகாசம்... மேலும் 22 தமிழக மீனவர்கள் கைது
புதுக்கோட்டை: சிங்கள கடற்படையின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஏற்கனவே 220 மீனவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு விடுவிக்காமல் அக்கிரமம் செய்து வரும் இலங்கைப் படையினர் இன்று மேலும் 22 மீனவர்களைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இன்று அதிகாலையில் இவர்களை பாக் ஜலசந்தி பகுதியில் சிறை பிடித்துச் சென்றுள்ளது சிங்களக் கடற்படை. தமிழக மீனவர்களையும், அவர்களது ஆறு படகுகளையும் காங்கேசன்துறை துறைமுகத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாம் சிங்களக் கடற்படை.

22 மீனவர்கள் கடத்தப்பட்ட செய்தி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெகதாப்பட்டனத்தில் பதட்டம் நிலவுகிறது.
இத்தனைக்கும் நேற்றுதான் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் குழு, பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசி விட்டு வந்தது. ஆனால் இன்று மீண்டும் 22 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கடத்தியுள்ள செயல் இந்தியாவை மிக மிக கேவலமாக இலங்கை கருதுவதையே நிரூபிப்பதாக உள்ளது.












Click it and Unblock the Notifications