Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடி அருகே 24 இலங்கை மீனவர்கள் கைது- படகுகள் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 24 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களது 4 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்திய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான வைபவ் ரோந்து படகில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 4 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

இதனைக் கண்ட கடலோர காவல்படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த இலங்கை மீனவர்களான அனில் டென்சிங், பிரதீப்காந்த், அன்டெனி செபஸ்டியான் உட்பட 24 பேரை கைது செய்தனர். அவர்களின் 4 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

மீனவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இலங்கை நீர்கொழும்பு, கல்பட்டி, முக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும், இந்திய கடல் எல்லை பகுதியில் அதிக மீன்கள் கிடைப்பதால் அப்பகுதிக்குள் வந்து மீன் பிடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

பிடிபட்ட இலங்கை மீனவர்களிடம் மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பிடிபட்ட இலங்கை மீனவர்கள் 24 பேரையும் கடலோர காவல்படையினர் தூத்துக்குடி தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் அப்பகுதியிலுள்ள ஒரு திருமணமண்டபத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+