ரூ.2 கோடி பரிசளித்த முதல்வரை நேரில் சந்திக்க விரும்பும் மாரியப்பன் தங்கவேலு
சென்னை : பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்றுள்ள மாரியப்பன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அவரிடம் வாழ்த்து பெறுவதை விருப்பமாகக் கொண்டுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
31வது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சனிக்கிழமை காலை நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கும் மாரியப்பனுக்கு ரூ2 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தம்முடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு மாரியப்பனின் பெற்றோர் தங்கவேலு-சரோஜா நன்றி தெரிவித்துள்ளனர். பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை பெற்ற எங்களது மகனுக்கு நல்ல வாய்ப்பும், புகழும் கிடைத் துள்ளது.
மாரியப்பன் தமிழகம் திரும்பியதும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என்பதையே விருப்பமாக தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் தமிழக முதல்வரை சந்திக்க வேண்டி அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
எப்பொழுதுமே விளையாட்டுத் துறை மீது தனி அக்கறை செலுத்தும் தமிழக முதல்வர், எங்களது மகன் தங்கப் பதக்கம் வென்றதும், உடனடியாக ரூ.2 கோடி பரிசளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக, நாங்கள் முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்கப் பதக்கத்துடன் மாரியப்பன் தாயகம் திரும்பும் போது, ஒரு சில நிமிடங்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பளித்தால், அதனை பெருமையாக கருதுவோம்.
விளையாட்டுத்துறை வளர்ச்சியில் பெரிதும் அக்கறையும், முக்கியத்துவமும் அளிக்கும் தமிழக முதல்வர், மாரியப்பன் சந்தித்து வாழ்த்து பெற ஒரு வாய்ப்பை அளிப்பார் என நம்புகிறோம்.
எங்கள் மகன் தங்கம் வெல்ல காரணமாக இருந்த பாராலிம்பிக் வாலிபால் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா தலைவர் சந்திரசேகர், பயிற்சியாளர் சத்யநாராயணன் மற்றும் பள்ளி, கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தொடர்ந்து ஊக்கமளித்த கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி ஆகியோருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்று மாரியப்பனின் பெற்றோர் கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications