ஆசிரியர்களை குறி வைத்து வழிபறி… 3 பேர் மீது குண்டாஸ்
ஆசிரியர்களை குறி வைத்து தொடர் வழிபறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தூர்: தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் இருக்கும் மற்ற ரவுடிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
அருப்புக்கோட்டை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் அடிக்கடி செயின் பறிப்பு நடந்து வருகிறது. குறிப்பாக, ஆசிரியர்களை குறி வைத்து நகை பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வந்தது.

இந்நிலையில் இதனை தடுக்க விருதுநகர் மாவட்ட எஸ்.பி. ராஜராஜன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. தனபால் ஆலோசனையின்படி, இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையில் தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டனர். தனிப்படை போலீசார் சந்தேகப்படும் படியாக இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரியும் நபர்கள், பழைய குற்றவாளிகள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த தொடர் வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் நடுவப்பட்டியை சேர்ந்த சேது என்ற சேதுராமன், ஆலம்பட்டியை சேர்ந்த மணிகண்டன், மாரிச்செல்வம் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த 3 பேர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 25-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க அருப்புக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டர் முருகையன், மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் சிவஞானம் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications