சேரன்மகாதேவி அருகே... சமையல் செய்து கொண்டு இருந்த மூவர் இடி தாக்கி பலி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சமையல் செய்து கொண்டிருந்த மூன்று பேர் இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேரன்மாதேவி அருகே உள்ள மேலகுனியுர் கிராமத்தை சேர்ந்தவர்கள் இசக்கி(31), விஜி (19),முருகன்26). இவர்கள் 3 பேர் மற்றும் 12க்கும் மேற்ப்பட்டோர் பிற்பகல் அக்கிராமத்தில் ஊருக்கு வெளியே உள்ள விவசாய நிலத்தில்கூலி வேலை செய்துவிட்டு சமையல் செய்து கொண்டிருந்தனர்.

3 died of thunder attack

அப்போது திடீரென இடி-மின்னலுடன் பலத்தமழை பெய்தது. இதனால்சமையல் செய்து கொண்டிருந்தவர்கள் அங்கிருந்த மரங்களின் கீழ் ஒதுங்கினர். அப்போது திடீரென மரத்தின் மீது இடி விழுந்ததில் இசக்கி(31), விஜி (19),முருகன் (26) உள்பட 3 பேரும் அதே இடத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சேரன்மகாதேவி காவல்நிலைய போலீசார் மற்றும்வருவாய்த்துறை அதிகாரிகள்சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் ஒருவருக்கு காயமும் 12 பேருக்கு செவித்திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+