அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை.. கரூரை அதிர வைக்கும் கொள்ளையர்கள்!

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் அடுத்தடுத்து 3 வீடுகளை கொள்ளையடித்த கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள காமராஜர் தெருவை சார்ந்தவர் சுப்பிரமணி (35). இவர் இங்குள்ள ஜவுளி நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக உள்ளார்.

3 houses looted in Karur

சுப்பிரமணி தனது தம்பி சேகரின் திருமணத்திற்காக ஈரோடு மாவட்டம், சென்னிமலைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலையில், சுப்பிரமணியனின் வீடு திறந்து கிடந்ததுடன், உள்ளே இருந்த லைட், பேன் ஆகியவை ஓடியபடி இருந்துள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகிலிருந்த வீட்டார்கள் வெங்கமேடு போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் அளித்துள்ளனர்.

3 houses looted in Karur

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விசாரணை நடத்திய போது சுமார் 35 பவுன் நகைகள் பீரோவை உடைத்து திருடர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் ரொக்கம் ரூ 20 ஆயிரமும் திருடு போய் உள்ளது தெரிய வந்துள்ளது.

3 houses looted in Karur

இச்சம்பவம் குறித்து வெங்கமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதே போல சுப்பிரமணியனின் அருகே உள்ள மேலும் இரு வீடுகளிலும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+