கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய இளம் பெண் – விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற 3 பேர் கைது!
தருமபுரி: தருமபுரியில் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய் அருகேயுள்ள லாலாகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் சிறுவயதிலேயே தனது பெற்றோரை இழந்தவர்.
அதே கிராமத்தில் உள்ள தனது பெரியம்மாவின் பராமரிப்பில் வசித்து வந்தார்.இந்த நிலையில் பெரியம்மா திட்டியதால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெள்ளிக்கிழமை வெளியேறிய அந்தப் பெண் தருமபுரி பேருந்து நிலையம் வந்தார்.
ஆத்திரத்தில், வீட்டைவிட்டு வெளியேறி, எங்கு செல்வது எனத் தெரியாமல் விழித்த அவருக்கு, அங்கு நின்றிருந்த வெண்ணாம்பட்டி குடியிருப்பைச் சேர்ந்த படையப்பா என்ற ரவி, அவரது மனைவி சாந்தி ஆறுதல் கூறியதுடன், வேலை வாங்கித் தருவதாகக் கூறி தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற அந்தபெண்ணை, தங்களது வீட்டில் இருந்த தனியறையில் அடைத்து, விபசாரத்தில் ஈடுபடுமாறு அவர்கள் வற்புறுத்தினராம். இதையடுத்து, அங்கிருந்து தப்பி வந்த அந்தப் பெண், இதுகுறித்து தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து படையப்பா என்ற ரவி, அவரது மனைவி சாந்தி, இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டதாக நெசவாளர் காலனியை சேர்ந்த சக்திவேல் ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications