தமிழகத்தில் அதிகாலையில் நடந்த 2 விபத்துகள்: 3 பேர் பலி!
சென்னை: தமிழகத்தில் இன்று அதிகாலையில், நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
செங்கல்பட்டில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது பின்னால் வந்த வேன் மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தனபாலன் என்பவர் படுகாயம் அடைந்தார்.

படுகாயம் அடைந்த தனபாலன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்தில் சிக்கிய மூவரும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு விபத்தில், நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று திண்டிவனம், சாரம் அருகே புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநனர் பிரதாப் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications