சசிகலா குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்கள்... அதிமுக இணைப்பில் நீடிக்கும் சிக்கல்
சசிகலா குடும்ப நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள் கலந்து கொண்டது அதிமுகவின் இரு அணிகள் இணைவதில் மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
தஞ்சாவூர்: சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் வலியுறுத்தி வரும் நிலையில், தஞ்சையில் சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனின் படம் திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் 3 பேர் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி முதல் அதிமுக இரு அணிகளாக பிளவு பட்டுள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னம் கேட்டு இரு அணிகளும் மல்லுக்கட்டின.
இந்திய தேர்தல் ஆணையம் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்துள்ள நிலையில் அதனை மீட்க சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் இணைய வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினர்.

ஓபிஎஸ் கிரீன் சிக்னல்
அணிகள் இணைய அமர்ந்து பேசுவோம் என்று ஓபிஎஸ் ஆரம்பிக்க, அதை அம்மா அணியைச் சேர்ந்த தம்பித்துரை வரவேற்க இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த குழுக்களும் அமைக்கப்பட்டன.

ஓபிஎஸ் அணியின் நிபந்தனைகள்
இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் முக்கியமான இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளனர். சசிகலாவின் குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதாவின் இறப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர்.

நீடிக்கும் இழுபறி
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்று எடப்பாடி பழனிச்சாமி அணி தரப்பினர் கூறுகின்றனர். டிடிவி தினகரனை ஒதுக்கி விட்டதாக கூறியுள்ளனர் அமைச்சர்கள். அவரும் லஞ்ச வழக்கில் சிக்கி திகார் சிறைக்கு போய் விட்டார். அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலா பேனர்களை அகற்றி விட்டனர்.

தாமதமாகும் பேச்சுவார்த்தை
இரு அணிகளைச் சேர்ந்த தலைவர்கள் மாறி மாறி பேட்டி கொடுத்து வருகின்றனர். இதனால் இரண்டு தரப்பினருக்கான பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவுகிறது. இந்த சூழலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மக்களின் மனநிலையை அறிய விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்றும், இதனாலும் பேச்சுவார்த்தை தாமதமாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மகாதேவன் படத்திறப்பு
இதில் மேலும் ஒரு பிரச்னையாக சசிகலா குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக அமைச்சர்கள் 3 பேர் கலந்து கொண்டது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையில் சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனின் படம் திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் 3 பேர் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர்கள் பங்கேற்பு
மகாதேவன் கடந்த 16ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் டிடிவி தினகரனின் தாய் மாமா மகன். சசிகலாவின் கணவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன் மற்றும் காமராஜ் கலந்து கொண்டுள்ளனர். மேலும் எம்எல்ஏ ரெங்கசாமி மற்றும் கருணாஸூம் கலந்து கொண்டனர். இதனால் பேச்சுவார்த்தையில் மேலும் முட்டுக்கட்டை விழுந்துள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications