ம.பி. ரயில் நிலைய தீவிபத்து எதிரொலி- நாளை டெல்லி செல்லும் 2 ரயில்கள் ரத்து!
சென்னை: மத்திய பிரதேசம் இடார்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தினைத் தொடர்ந்து நாளை டெல்லி செல்லக் கூடிய 2 தமிழக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த 17ம் தேதியன்று மத்திய பிரதேசம் இடார்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தண்டவாளங்கள் சேதமடைந்தன. அங்கு சீரமைப்புப் பணிகள் நடந்து வருவதனைத் தொடர்ந்து பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மேலும் மூன்று ரயில்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது தெற்கு ரயில்வே.
மதுரையிலிருந்து நிஜாமூதின் வரை செல்லும் சம்பர்க் கிராந்தி (வழி சென்னை எழும்பூர் வண்டி எண்: 12651)
கோவையிலிருந்து நிஜாமூதின் வரை செல்லும் கொங்கு விரைவு ரயில் (வண்டி எண்: 12647) ஆகியவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் திருவனந்தபுரம்- கோரக்பூர் ரப்திசாகர் ரயிலும் (வழி சென்னை சென்ட்ரல்; வண்டி எண்:12511) நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில்களில் முன் பதிவு செய்த பயணிகள் தங்கள் பயண திட்டத்தை அதற்கேற்றார்போல் மாற்றிக் கொள்ள ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications