குடியாத்தம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 4 பேர் பலி!
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் குடியாத்தத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கள்ளப்பாடி பகுதியில் அமைந்துள்ளது ஆர்.ஜி.எஸ் பட்டாசு ஆலை. இங்கு அமைந்துள்ள பட்டாசு குடோனில் இன்று காலை திடீரென்று பட்டாசுகளில் தீபிடித்து வெடிவிபத்து ஏற்பட்டது. இவ்வெடி விபத்தில் சிக்கிய 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் குடோன் கட்டிடம் தரைமட்டமானது.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.












Click it and Unblock the Notifications