தமிழகத்தில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 2 வயது சிறுமி உட்பட 4 பேர் சாவு
சென்னை: கனமழை காரணமாக தமிழகத்தின் இருவேறு பகுதிகளில் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிறுமி உட்பட 4 பேர் பலியாகினர்.
அரியலூர் பகுதியில் நேற்று தொடர்ச்சியாக பெய்த கனமழையால், ஆர்.எஸ். மாத்தூர் அருகே உள்ள நந்தியன்குடிகாடு கிராமத்தில் ஜெகதாம்பாள் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. இதில் அந்த மூதாட்டி இடிபாடுகளில் சிக்கி பலியானார்.

சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் அருகே ஏகாட்டூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒஎம்ஆர் சாலை ஓரத்தில் நாவலூர்முத்து என்பவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. அதில் இரண்டாவது மாடி கட்டுவதற்காக மதில் சுவர்கள் எழுப்பபட்டு வந்தன.
நேற்று பெய்த கனமழையால் சுவர் இடிந்து அருகில் உள்ள உணவகம் மேல் விழுந்தது. இதில் உணவக ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். இருவர் பலத்த காயத்துடன் சென்னை ராயபேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.
தகவல் அறிந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல, காஞ்சிபுரம் மாவட்டம் பனையூரில் சுவர் இடிந்து விழுந்து பவித்ரா என்ற 2 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த அவரது குடும்பத்தார் 2 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications