குன்னூரில் இருந்து 3 சிங்களவர்கள் வெளியேற்றம்
Subscribe to Oneindia Tamil
குன்னூர்: நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து மூன்று சிங்களர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த மூன்று பேர் தேயிலை ஆராய்ச்சிக்காக குன்னூர் வந்திருந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த தமிழ் அமைப்பினர், உடனடியாக அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, மூன்று சிங்களர்களும் இன்று அதிகாலை குன்னூரில் இருந்து வெளியேற்றப்பட்டு கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு குன்னூருக்கு பயிற்சி பெற வந்த ராணுவ அதிகாரிகள், போராட்டம் காரணமாக திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications