மதுரை : கல் குவாரியில் மண் சரிந்து விபத்து - 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கல் குவாரில் ஒன்றில் மண் சரிந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டடையம்பட்டி கிராமத்தில், உள்ள தனியார் கல்குவாரியில் இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.

3 workers died in private quarry in Madurai

குவாரியில் வெடிவைத்து தகர்க்க 3 தொழிலாளர்கள் கயிறு கட்டி மலையில் ஏறும்போது கயிறு அறுந்து அங்குள்ள பாறைகளுக்கு நடுவில் தொழிலாளர்கள் மூவரும் விழுந்து மண்ணில் புதையுண்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் நல்லையன், செந்தில், ராமு ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று கல்குவாரியில் விசாரணை மேற்கொண்டனர். படுகாயமடைந்த சுதர்சன் என்பவரை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மண்ணில் புதையுண்ட தொழிலாளர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர். மோப்ப நாய் உதவியுடன் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.இதனிடையே தகவலறிந்து சென்ற வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ், மாவட்ட கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரி ஆகியோர் கல்குவாரியை நேரில் பார்வையிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+