விளையாட்டாக கடித்த 3வயது சிறுவனை கொடூரமாக கொன்ற மாமன் கைது
திருவள்ளூர்: மூன்று வயது சிறுவன் விளையாட்டாக அடித்ததால் அந்த சிறுவனை தாய்மாமன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை கொடூரமாக கொன்ற தாய்மாமனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அழிஞ்சிவாக்கத்தை சேர்ந்தவர் முருகன். இவருக்கு ஹேமந்த் என்ற 3 வயது மகன் உள்ளார். நேற்றிரவு வீட்டில் ஹேமந்த் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்த சிறுவனை காணவில்லை . இதனால் குடும்பத்தினர் சிறுவனை பல இடங்களில் தேடினர். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஹேமந்த் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து ஹேமந்த்தின் குடும்பத்தினர் கதறி அழுதனர் .

இதுதொடர்பாக பெரியபாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதிச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. முருகனின் மனைவி ஹேமலா. இவரது சித்தி மகன் தமிழ்செல்வன். எம்.ஏ பட்டதாரி. வேலை இல்லாமல் ஊரைச்சுற்றி கொண்டு இருந்துள்ளார். அப்போது கடந்த வாரத்தில் ஹேமந்த்துவுடன் தமிழ்செல்வன் விளையாடிய போது ஹேமந்த் விளையாட்டாக அவரை கடித்து விட்டார்.
அப்போது ஆத்திரத்தில் தமிழ்செல்வன், ஹேமந்த்தை கொலை செய்வதாக கூறியுள்ளார். அதையாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதுபோல ஹேமந்த்துவுடன் விளையாடிய போது தமிழ்செல்வனின் கன்னத்திலும் ஹேமந்த் அறைந்துள்ளார். இதுவும் ஹேமந்த் மீது தமிழ்செல்வனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குப் பழிவாங்க நேற்றிரவு ஹேமந்த் தூங்கி கொண்டு இருந்தபோது அவரை யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து தூக்கி கொண்டு கழிவுநீர் தொட்டி அருகே சென்றுள்ளார்.
அங்கு கை, கால்களை கட்டியதோடு ஹேமந்த்தின் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் அந்த சிறுவன் துடிதுடித்து உயிரிழந்தார். அந்த சிறுவனை கொலை செய்த அவரது தாய்மாமன் தமிழ் செலவனை போலீசார் கைது செய்தனர். விளையாட்டாக அடித்து விளையாடிய சிறுவனை தாய்மாமனே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications