எந்தாடா இது கொடுமை.. இலையில் கட்டி 3 மணி நேரம் தூக்கி செல்லப்பட்ட "குட்டி கிருஷ்ணா"!
கண்ணூர்: கேரளாவின் கண்ணூர் நகரில் நடந்த கிருஷ்ணர் ஊர்வலத்தின்போது குட்டிப் பையன் ஒருவனை இலையில் வைத்துக் கட்டி பல மணி நேரம் ஊர்வலமாக கொண்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தற்போது கேரள மாநில சிறார் உரிமை பாதுகாப்பு கமிஷன் வழக்குப் பதிவு செய்துள்ளது. ஸ்ரீகாந்த் உஷா பிரபாகரன் என்பவர் இதுதொடர்பாக புகைப்படம் ஒன்றை தனது பேஸ்புக்கில் போட்டிருந்தார். அது வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து தற்போது வழக்குப் பாய்ந்துள்ளது.
பையனூர் பகுதியில் இந்தசம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறார்களை கிருஷ்ணர் வேடமிட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது ஒரு 3 வயது சிறுவனை பெரிய வெற்றிலையில் கட்டி வைத்து தூக்கிய வாக்கில் குட்டி ஆட்டோவில் வைத்து கூட்டி வந்தனர்.

மக்கள் அதிர்ச்சி
இதைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுவனுக்கு நடப்பது எதுவுமே புரியவில்லை. ஆனால் குழந்தையை இப்படி கட்டி வைத்து தூக்க வந்ததைப் பார்த்த ஸ்ரீகாந்த் பதறிப் போனார். உடனே ஊர்வலம் நடத்தியவர்களிடம் சென்று முதலில் குழந்தையை அவிழ்த்து விடுமாறு கேட்டார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.

போட்டோ போட்ட ஸ்ரீகாந்த்
இதையடுத்து தனது பேஸ்புக்கில் இதைப் புகைப்படமாக எடுத்துப் போட்டார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. புகைப்படத்தைப் பார்த்த கேரள மாநில சிறார் பாதுகாப்பு கமிஷன் அதிகாரிகள் உடனடியாக இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டனர்.

வழக்குப் பதிவு
இந்த சம்பவம் தொடர்பாக 2 வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு மாநில உள்துறை செயலாளர், மாநில போலீஸ் டிஜிபி, மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு கமிஷன் உத்தரவிட்டுள்ளது

விவேகானந்தர் சேவா சமிதி
விவேகானந்தர் சேவா சமிதி என்ற அமைப்புதான் இந்த ஊர்வலத்தை நடத்தியது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் அந்த சிறுவனை கட்டி வைத்த நிலையில் தூக்கிச் சென்றுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications