மழையால் இழந்த சான்றிதழ்கள்... சிறப்பு முகாம்களில் 35,541 பேர் விண்ணப்பம்
சென்னை: சென்னை மாவட்டத்திலுள்ள 10 வட்டங்களில் நடைபெற்ற முகாம்களில் இதுவரை 35,541 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றிக்கான ஓப்புகைச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் உடமைகளுடன் முக்கிய ஆவணங்களை இழந்துள்ளனர். கல்விச் சான்றிதழ் ஆவணங்களின் நகல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை அவர்களுக்கு கட்டணமின்றி வழங்கும் பொருட்டு முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி, நான்கு மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னை மாவட்டத்திலுள்ள 10 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கடந்த 14ம்தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 3,572 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வருவாய்த் துறை தொடர்பாக 117 விண்ணப்பங்களும், பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக 640 விண்ணப்பங்களும், பத்திரப்பதிவுத்துறை தொடர்பாக 173 விண்ணப்பங்களும், போக்குவரத்துத்துறை தொடர்பாக 878 விண்ணப்பங்களும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தொடர்பாக 193 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு 1,017 விண்ணப்பங்களும், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை தொடர்பாக 193 விண்ணப்பங்களும், பொதுத்துறை வங்கிகள் தொடர்பாக 204 விண்ணப்பங்களும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்பாக 135 விண்ணப்பங்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தொடர்பாக 14 விண்ணப்பங்களும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொடர்பாக 8 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
சென்னை மாவட்டத்திலுள்ள 10 வட்டங்களில் 9 நாட்களில் நடைபெற்ற முகாம்களில் இதுவரை 35,541 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றிற்கான ஒப்புகைச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி கூறியுள்ளார்.
மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் இழந்துள்ள நிலம் மற்றும் வீட்டுமனைப் பட்டா, கல்வி சான்றிதழ், எரிவாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நிலம்/ வீட்டு கிரையப் பத்திரம், ஆட்டோ ஓட்டுநர்கள் இழந்துள்ள ஓட்டுநர் உரிமச் சான்று மற்றும் வாகன பதிவுச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை அவர்களுக்கு வழங்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்திலுள்ள 10 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 14.12.2015 முதல் 28.12.2015 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இம்முகாம்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று ஒரு வார காலத்திற்குள்ளாக கட்டணமின்றி நகல் ஆவணங்கள் வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications