For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை: தொழிலதிபர் வீட்டில் 35 கிலோ தங்கம் பறிமுதல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 35 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வருபவர் தமீம் அன்சாரி. இவரது வீட்டில் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

35 kg of gold bars seized

இதையடுத்து அதிகாரிகள் இன்று காலை 11 மணி அளவில் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு 35 கிலோ தங்க கட்டிகள் சிக்கின. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வீட்டில் இருந்த தமீம்அன்சாரி, அவரது தம்பி ரகுமான் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது கீழக்கரையில் இருந்து தங்கத்தை கொண்டு வைத்திருப்பதாக தெரிவித்தனர். இது வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டதா? ஏன் அங்கு வைக்கப்பட்டிருந்தது? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

English summary
In a major operation, officials of the Directorate of Revenue Intelligence (DRI) busted a gold smuggling Chennai businessman house. Totally, 35 kg of gold bars were seized, which was valued at Rs. 15 crore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X