For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனல் மின் நிலையத்தில் மேலும் ஒரு யூனிட் பழுது.. மின்சார உற்பத்தி பாதிப்பு

அனல் மின் நிலையத்தில் மேலும் ஒரு யூனிட் பழுதடைந்துள்ளது. இதனால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன.

இதன் மூலம் தினமும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த யூனிட்டுகள் அடிக்கடி பழுதடைவதாலும், பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவதாலும் இங்கு மின் உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.

3rd power plant unit shut down for repair in Tuticorin

அனல்மின் நிலைய 3-வது யூனிட்டில் கொதிகலனில் திடீரென பழுது ஏற்பட்டு அதில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாட்டால் 1, 2-வது யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 3 யூனிட்டுகளிலும் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனல்மின் நிலைய ஊழியர்கள் கூறும் போது, 30 ஆண்டுகளை கடத்து இயங்கி வரும் அனல் மின் நிலையத்தில் அடிக்கடி விபத்து மற்றும் பழுது ஏற்பட்டு வருகிறது. தற்போது 4,5-வது யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. 3-வது யூனிட்டில் கொதிகலன் பழுதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது என்றனர்.

English summary
The 3rd unit of the Tuticorin Power Plant was today shut down for doing repair works according to reports.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X