தொடரும் மின் சோகம்.. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 3வது யூனிட் மீண்டும் 'அவுட்'

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 மின் உற்பத்தி அலகுகள் மூலமாக நாள்தோறும் 1050 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி அலகுகளில் போதுமான பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாத காரணத்தினால் அடிக்கடி மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 3வது மின் உற்பத்தி அலகில் நேற்று மதியம் பாய்லரில் திடீர் பழுது ஏற்பட்டது. இந்தபழுதின் காரணமாக இந்த அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே 3வது யூனிட்டின் பழுது சரி செய்யப்பட்டு கடந்த இருதினங்களுக்கு முன்பு தான் மின்உற்பத்தி துவங்கப்பட்ட நிலையில், 3வது யூனிட் மீண்டும் பழுதாகி மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனந்தமே என்று எல்லோரும் தடையில்லா மின் விநியோகத்தை அனுபவித்து வந்த நிலையில், அய்யய்யோ மின்வெட்டு மறுபடியும் ஆரம்பமே.... என்று சோகப்பாட்டு பாடும் நிலையில், தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மின்வெட்டு அமுலுக்கு வந்துள்ள சூழலில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மின்உற்பத்தி கோளாறு மின்வெட்டு நேரத்தை அதிகப்படுத்தும் நிலைக்கு தள்ளியுள்ளது.












Click it and Unblock the Notifications