4 தீவிரவாதிகளை டிசம்பர் 1க்குள் பெங்களூரு என்.ஐ.ஏ கோர்ட்டில் ஆஜர்படுத்த மேலூர் கோர்ட் உத்தரவு
மதுரையில் கைது செய்யப்பட்ட அல்கொய்தா அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நால்வரை மேலூர் நீதிமன்றத்தில் என்ஐஏ அமைப்பினர் இன்று ஆஜர்படுத்தினர்
மதுரை: மைசூர் குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் மதுரையிலும் ஒருவர் சென்னையிலும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தேசிய புலனாய்வுப்படையினர் நடத்திய விசாரணையில் மேலும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின.
டெல்லி தேசிய புலனாய்வுப்பிரிவு போலீசாரின் 13 தனிப்படையினர் நவம்பர் 27 முதல் மதுரையில் முகாமிட்டு கண்காணிப்பு மற்றும் விசாரணையை வேகப்படுத்தினர். டெல்லி, சென்னை, ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த தேசிய புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டு அல்கொய்தா அடிப்படைவாத அமைப்பினரை கைது செய்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

மூளைச்சலவையால் மதுரை இளைஞர்கள் தீவிரவாத செயலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் கைதானவரும் மதுரையை சேர்ந்த இளைஞர்தான். தீவிரவாத செயல்களுக்கான செலவினங்களுக்கு பல கோடி ரூபாய் பணம் மதுரைக்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டிருக்கிறது.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மதுரையை மையமாக வைத்து கும்பல் ரூ.25 கோடி வரை இளைஞர்களின் வங்கிக்கணக்குகள் மூலம் புதிய நோட்டுகளாக மாற்றிச் சென்றுள்ளனர். இந்த பணத்தை மாற்றித்தர தீவிரவாதக் கும்பல், 30 சதவீத கமிஷன் கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
வங்கிக்கணக்குகள் மூலம் பணம் மாற்றியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்பேரிலும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தீவிரவாத தொடர்புடைய மேலும் சிலர் சிக்குவர் என்பது தெரியவந்துள்ளது.
இதுதவிர கைதான அப்பாஸ் அலி மற்றும் 2 பேரிடமும் அல்கொய்தா தொடர்புடன், பிரதமர் உள்ளிட்ட 22 முக்கிய தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருப்பது குறித்த விசாரணையை வேகப்படுத்தியுள்ளோம். விசாரணை முடிவில், மிகப்பெரிய சதித்திட்டம் குறித்த விபரங்கள் வெளிவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மதுரையில் நேற்று கைது செய்யப்பட்ட அப்பாஸ் அலி, கரீம் ராஜா, சம்சுதின் உள்ளிட்ட 4 பேர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மைசூர் மற்றும் மலப்புரம் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைத்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலூர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் இவர்களிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது அவர்கள், என்ஐஏ அமைப்பினர் தங்களை தாக்கி காயப்படுத்தியதாக தெரிவித்தனர். அதற்கு என்ஐஏ அமைப்பைப் சேர்ந்த வழக்கறிஞர் மறுத்தார். விசாரணைக்குப் பின்னர் மதுரையில் பிடிபட்ட 4 தீவிரவாதிகளை டிசம்பர் 1க்குள் பெங்களூரு என்.ஐ.ஏ கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 4 தீவிரவாதிகளையும் பெங்களூரு கொண்டுசெல்ல மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications