வேலை வாங்கித் தருவதாக இலங்கை அகதியிடம் ரூ. 3.7 லட்சம் மோசடி... பெண் உட்பட 4 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி: ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இலங்கை அகதியை ஏமாற்றி, ரூ. 3.7 லட்சம் மோசடி செய்ததாக சென்னையில் பெண் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே கூட்டூரில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வருபவர் இலங்கையைச் சேர்ந்த முத்துராஜ் (40). இவர் ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தன்னை சென்னையைச் சேர்ந்த சிலர் ரூ. 3.7 லட்சம் ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளித்தார்.

4 arrested for cheating Sri Lankan refugee

இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த பெண் உட்பட நான்கு பேரைக் கைது செய்த போலீசார், அவர்களை விசாரணைக்காக பொள்ளாச்சி அழைத்துச் சென்றனர். அங்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, அவர்களை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்

போலீசாரின் விசாரணையில் அந்தக் கும்பல் முத்துராஜ் போன்று பலரையும் ஏமாற்றியதாகத் தெரிகிறது.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களிடம் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் குறித்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+