போலி நம்பர் பிளேட் பொருத்திய வாகனங்களில் வந்த 4 பேர் கைது
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலி நம்பர் பிளேட்டுடன் வாகனங்களை ஓட்டி வந்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மூன்று கார்கள் கைப்பற்றப்பட்டன.
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. குரு பூஜை, நினைவு தினத்திற்கு வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக் கூடாது, மூன்று வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
அதனையும் மீறி தலித் தலைவர்களான ஜான்பாண்டியன் மற்றும் கிருஷ்ணசாமியுடன் 40க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்தனர். அனைத்து வாகனங்களும் சோதனைசாவடியில் டிரைவர்களுடன் படம் எடுத்து பதிவு செய்தனர்.

பின்னர் அவற்றை சரி பார்க்கையில் வாடகை வாகனங்களள சொந்த வாகனம் போல பதிவு எண்ணை மாற்று கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மானாமதுரை சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 14 வாகனங்கள்,உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று கருர் மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த மூன்று கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் உரிமையாளர்கள் யுவராஜா, ஹேமந்த்குமார் மற்றும் ஓட்டுனர்கள் தமிழ்வாணன், கணேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஜாமீனில் வெளிவராத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்களைத்தான் அதிகளவு எடுத்து வந்துள்ளனர். தற்போது இவர்கள் மீது ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதால் இவர்கள் பெரும் செலவு செய்துதான் வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவர முடியும்.
இதன் மூலம் அடுத்து மருதுபாண்டியர், தேவர் குரு பூஜைக்கு யாரும் இதுபோல திருட்டுத்தனமாக வாகனங்களை கொண்டு வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications