For Daily Alerts
Just In
அதிமுக ஏற்பாடு செய்த கூட்டத்தில் 4 வெடிகுண்டுகள் பறிமுதல்
மதுரை: ஆளும் அதிமுக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் இருந்து வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பககுதியில் நேற்று இரவு அமைச்சர் செல்லூர் ராஜா அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியிருந்தார்.
இக்கூட்டத்திற்கு முன்பாக அங்கிருந்து 2 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகும், ஒரு செட் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் எதுவும் வெடிக்கவில்லை.
கைப்பற்றப்பட்டதில் இரண்டு, நாட்டு வெடிகுண்டுகள் என்பதாகவும், 2 பெட்ரோல் குண்டுகள் என்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை செல்லூர் ராஜு அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Two country-made bombs and an equal number of petrol bombs have been recovered from the venue of a meeting organised by the ruling All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK ), police said on Wednesday.
Story first published: Wednesday, January 13, 2016, 17:32 [IST]