நெல்லை அருகே டாடா மேஜிக் வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து- 4 பேர் பலி
நெல்லை: குற்றாலத்தில் இருந்து மதுரைக்கு சென்ற டாடா மேஜிக் வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையை சேர்ந்த 7 பேர் குற்றாலத்திற்கு டாடா மேஜிக் வாகனத்தில் வந்திருந்தனர். குற்றாலத்தில் குளித்து விட்டு மதுரைக்கு திரும்பிய போது மாலை 5 மணிக்கு தென்காசி-கடையநல்லூர் இடையே இடைகால் என்னுமிடத்தில் அந்த வாகனம் வந்தது.

அப்போது அந்த வாகனம் மீது கோவில்பட்டியில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் டாடா வாகனம் தூக்கி வீசப்பட்டது.
மதுரையை சேர்ந்த ஜனார்த்தனன் மகன் விக்னேஷ்பாபு, அவரது மனைவி கர்ப்பிணியான பிரியா, ஜோதிராமன் என்பவரின் மனைவி ஜோதி, சுப்பிரமணியன் மகன் பாபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications