திருவண்ணாமலை தீர்த்தவாரியில் 4பேர் பலியான சோகம்: கோவில் இணை ஆணையர் இடமாற்றம்
திருவண்ணாமலை: தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது குளத்தில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து திருவண்ணாமலை கோயில் இணை ஆணையர் செந்தில்வேலன் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொது மக்கள் மற்றும் நிர்வாக நலன் கருதி செந்தில்வேலன் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை கோயில் இணை ஆணையர் பொறுப்பு விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வாசுநாதனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அர்த்தோய புண்ணியகாலம் எனப்படும் மஹோதய புண்ணியகால விழா இன்று சிறப்பாக நடைபெறுகிறது. கடற்கரை மற்றும் கோயில் குளங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு அனைவரும் தர்ப்பணம் செய்வது வழக்கம்.
தை அமாவாசை தினத்தில், திருவோணம் நட்சத்திரம் மற்றும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை ஆகியவை ஒருசேர அமையும் தினம் மஹோதய புண்ணியகாலமாக கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா மகம் போல், 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அமையும், மஹோதய புண்ணிய காலம் என்பது மிகவும் விசேஷமானது.
இதையொட்டி, திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயிலில் அண்ணாமலையாருக்கு இன்று அதிகாலை சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதன் பின்னர் அண்ணாமலையார் கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அய்யங்குளத்தில் எழுந்தருளிய அண்ணாமலையார், சூரிய உதயத்திற்கு முன்பு இந்திர தீர்த்தம் எனப்படும் தீர்த்தவாரி நடந்தது.
அப்போது, பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு நெருக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு ஒருவர் தள்ளிக் கொண்டு தீர்த்தவாரியை காண முண்டியடித்ததில் ஏராளமானோர் குளத்தில் தவறி விழுந்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் தப்பித்த நிலையில் சிலர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் உடனடியாக குளத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வெங்கடேசன், சிவா, புண்ணியக்கோடி மற்றும் தனியார் பொரியியல் கல்லூரி பேராசிரியர் மணிகண்டன் என்பவர்களது உடல்களை அவர்கள் மீட்டனர். 4 பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து பக்தர்கள் நீராட போலீசார் தடை விதித்தனர்.
ஆணையர் இடமாற்றம்
அபூர்வமான மஹோதய தீர்த்தவாரி நிகழ்ச்சியில் புனித நீராட பல ஆயிரக்கணக்கானோர் குளத்தில் குவிவார்கள் என்று தெரிந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், திருவண்ணாமலை கோயில் இணை ஆணையர் செந்தில்வேலன் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொது மக்கள் மற்றும் நிர்வாக நலன் கருதி செந்தில்வேலன் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை கோயில் இணை ஆணையர் பொறுப்பு விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வாசுநாதனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications