திருவண்ணாமலை தீர்த்தவாரியில் 4பேர் பலியான சோகம்: கோவில் இணை ஆணையர் இடமாற்றம்
திருவண்ணாமலை: தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது குளத்தில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து திருவண்ணாமலை கோயில் இணை ஆணையர் செந்தில்வேலன் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொது மக்கள் மற்றும் நிர்வாக நலன் கருதி செந்தில்வேலன் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை கோயில் இணை ஆணையர் பொறுப்பு விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வாசுநாதனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அர்த்தோய புண்ணியகாலம் எனப்படும் மஹோதய புண்ணியகால விழா இன்று சிறப்பாக நடைபெறுகிறது. கடற்கரை மற்றும் கோயில் குளங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு அனைவரும் தர்ப்பணம் செய்வது வழக்கம்.
தை அமாவாசை தினத்தில், திருவோணம் நட்சத்திரம் மற்றும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை ஆகியவை ஒருசேர அமையும் தினம் மஹோதய புண்ணியகாலமாக கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா மகம் போல், 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அமையும், மஹோதய புண்ணிய காலம் என்பது மிகவும் விசேஷமானது.
இதையொட்டி, திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயிலில் அண்ணாமலையாருக்கு இன்று அதிகாலை சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதன் பின்னர் அண்ணாமலையார் கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அய்யங்குளத்தில் எழுந்தருளிய அண்ணாமலையார், சூரிய உதயத்திற்கு முன்பு இந்திர தீர்த்தம் எனப்படும் தீர்த்தவாரி நடந்தது.
அப்போது, பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு நெருக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு ஒருவர் தள்ளிக் கொண்டு தீர்த்தவாரியை காண முண்டியடித்ததில் ஏராளமானோர் குளத்தில் தவறி விழுந்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் தப்பித்த நிலையில் சிலர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் உடனடியாக குளத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வெங்கடேசன், சிவா, புண்ணியக்கோடி மற்றும் தனியார் பொரியியல் கல்லூரி பேராசிரியர் மணிகண்டன் என்பவர்களது உடல்களை அவர்கள் மீட்டனர். 4 பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து பக்தர்கள் நீராட போலீசார் தடை விதித்தனர்.
ஆணையர் இடமாற்றம்
அபூர்வமான மஹோதய தீர்த்தவாரி நிகழ்ச்சியில் புனித நீராட பல ஆயிரக்கணக்கானோர் குளத்தில் குவிவார்கள் என்று தெரிந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், திருவண்ணாமலை கோயில் இணை ஆணையர் செந்தில்வேலன் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொது மக்கள் மற்றும் நிர்வாக நலன் கருதி செந்தில்வேலன் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை கோயில் இணை ஆணையர் பொறுப்பு விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வாசுநாதனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications