முள்ளம்பன்றியை வேட்டையாடிய 4 பேர் வனத்துறையினரால் கைது
Subscribe to Oneindia Tamil
தருமபுரி: தருமபுரி ஒகேனக்கல் பகுதியில் முள்ளம் பன்றியை வேட்டையாடிதாக 4 பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ளது பண்ணப்பட்டி கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வனப்பகுதியில் முள்ளம் பன்றியை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இச்செய்தியை அடுத்து வனத்துறையினர் பண்ணப்பட்டிக்கு சென்று சோதனை நடத்தினர். இதில், அக்கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், கணேசன், சர்க்கரை மற்றும் சேட்ட ஆகிய 4 பேர் ஒகேனக்கல் வனப்பகுதியில் முள்ளம் பன்றியை சுட்டு அதன் இறைச்சியை வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த இறைச்சியை பறிமுதல் செய்ததுடன், அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications