For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முள்ளம்பன்றியை வேட்டையாடிய 4 பேர் வனத்துறையினரால் கைது

Google Oneindia Tamil News

தருமபுரி: தருமபுரி ஒகேனக்கல் பகுதியில் முள்ளம் பன்றியை வேட்டையாடிதாக 4 பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ளது பண்ணப்பட்டி கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வனப்பகுதியில் முள்ளம் பன்றியை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

4 people arrested for hunting hedgehog in Dharmapuri

இச்செய்தியை அடுத்து வனத்துறையினர் பண்ணப்பட்டிக்கு சென்று சோதனை நடத்தினர். இதில், அக்கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், கணேசன், சர்க்கரை மற்றும் சேட்ட ஆகிய 4 பேர் ஒகேனக்கல் வனப்பகுதியில் முள்ளம் பன்றியை சுட்டு அதன் இறைச்சியை வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த இறைச்சியை பறிமுதல் செய்ததுடன், அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Four people arrested by the foresters for hunt Hedgehog in Dharmapuri oKenakal forest side.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X