For Quick Alerts
For Daily Alerts
Just In
அம்பாசமுத்திரம் அருகே 2 குழந்தைகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை
நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்பை அருகே உள்ள கஸ்பா பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் திருப்பூரில் டிசைனராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், மகேந்திரன், அவர் மனைவி ரேவதி, மகன், கதிர்வேல், மகள் அம்ருதா ஆகியோர் இன்று அவர்கள் வீட்டுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
கடன் தொல்லையால் குழந்தைகள் கதிர்வேல், அமித்ராவை கொலை செய்துவிட்டு மகேந்திரன் மற்றும் ரேவதி தம்பதியினரும் தற்கொலை செய்தனர். இவர்கள், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
4 person committed suicide near Ambasamudram in Nellai district.
Story first published: Thursday, September 13, 2018, 9:08 [IST]