கொசஸ்தலையாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்.. 4 பேர் மீட்பு.. ஒருவர் மாயம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கொசஸ்தலையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் கார் ஒன்று சிக்கியது. இதில் காரில் இருந்த 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒருவரின் நிலை மட்டும் என்ன ஆனது என்று தெரியவில்லை.
கொசஸ்தலையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல் ஒரு கார், தரைப்பாலத்தில் செல்ல முயன்றபோது கார் அடித்துச் செல்லப்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நீரில் குதித்து காரை மீட்டனர். அதில் இருந்த 4 பேரை பத்திரமாக மீட்டனர். ஆனால் ஒருவரை மட்டும் மீட்க முடியவில்லை. அவர் காருடன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது பெயர் கோதண்டன் என்று தெரிய வந்துள்ளது.
அந்தக் காரில் பயணித்தவர்கள் ஆவடியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. காருடன் அடித்துச் செல்லப்பட் கோதண்டன் கதி என்ன என்று தெரியவில்லை. அவரை மீட்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications