4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் கைது
ஈரோடு அருகே எல்.கே.ஜி. குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக ஆசிரியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு: பவானி அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் செந்தில். இவர் இதே பள்ளியில் எல்.கே.ஜி படித்து வரும் நான்கு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பவானி அருகே உள்ள சித்தோடு வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தை கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மனச்சோர்வுடன் இருந்துள்ளது. இதையடுத்து பெற்றோர் குழந்தையிடம் விசாரித்த போது, ஆசிரியர் தவறாக நடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் நடத்திய விசாரணையில், உடற்கல்வி ஆசிரியர் செந்தி குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications