போலி சான்றிதழ் மூலம் அரசு பணி - 407 பேரை வீட்டுக்கு அனுப்ப அரசு ஆயத்தம்
நெல்லை: மாற்று திறனாளி என போலி சான்றிதழ் கொடுத்து வேலை வாய்ப்பு பெற்ற மேலும் 407 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட உள்ளனர்.
தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள அலுவலகங்களில் கடந்த 2011 ஆம் ஆண்டு அலுவலக உதவியாளர் பணி முதல் ஆய்வாளர் பணி வரை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட்டனர்.

இவர்களில் பலர் போலி மாற்று திறனாளி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், இனசுழற்சி ஆகியவற்றில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. நெல்லை மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாற்று திறனாளிகள் சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் குழு முன்னிலையில் ஆஜராகி மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த சோதனையில் 108 பேர் போலி என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் அரசு பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு, முன்னுரிமை அடிப்படையில் நகராட்சி, பேரூராட்சிகளில் 400க்கும் மேற்பட்டவர்கள் வேலைக்கு சேர்ந்தது தெரிய வந்தது. இதையடுத்து லஞ்ச ஓழிப்பு துறையினர் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் உள்ளாட்சி பணிக்கான நேர்முக தேர்வில் கலந்து கொண்ட 2 ஆயிரம் பேரின் சான்றிதழ்கள், பதிவுமூப்பு, முன்னுரிமை, வேலைவாய்ப்பு அலுவலக அட்டை ஆகியவற்றை சோதனை செய்தனர்.
இதில் 515 பேர் முறைகேடாக வேலைக்கு சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் லஞ்சம் கொடுத்து வேலையில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களில் 407 பேர் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனால் பலர் பயத்தில் உள்ளனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications