For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா: '40 வயது' இளையராஜாவை கொண்டாடும் ரசிகர்கள்!

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: #40YrsOfMaestroILAYARAJA என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இசைஞானி இளையராஜா இசையமைக்கத் துவங்கி 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் இது குறித்து அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராஜாவின் இசையோடு வளர்ந்தவர்கள் நாங்கள் என பெருமையாக கூறுகிறார்கள்.

இந்நிலையில் #40YrsOfMaestroILAYARAJA என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

தாலாட்டு

பிறந்தது முதல் இவர் பாட்டை தான் கேட்கிறேன் ,, தாயின் தாலாட்டை விட அதிகமாக , #40YrsOfMaestroILAYARAJA என அன்சாரி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

பாட்டு

இசையமைப்பது என்னவோ 40 வருடங்கள் தான். ஆனால் இவரது இசை நிச்சயமாக இன்னும் 2000 ஆண்டுகள் கழித்தும் கேட்கப்படும்... #40YrsOfMaestroILAYARAJA என பென்சில் திருடன் ட்வீட் செய்துள்ளார்.

ராஜா

"நேற்று இல்லை..நாளை இல்லை...
எப்பவும் தான் நீ ராஜா"!
#40YrsOfMaestroILAYARAJA என கார்த்தி கூறியுள்ளார்.

சொத்து

தமிழனின் இசை சொத்து இசைஞானி. உங்கள் இசையின் தாலாட்டு வருகின்ற அனைத்து தலைமுறைக்கும் பயணித்துக் கொண்டே இருக்கும் #40YrsOfMaestroILAYARAJA என சுரேகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இசை

இந்த பூமியில் உள்ள யாராவது ஒருவராலாவது அவரது இசையை வெறுக்க முடியுமா? #40YrsOfMaestroILAYARAJA என ப்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
#40YrsOfMaestroILAYARAJA is trending on twitter as his fans couldn't stop talking about the magic of the music he has given to this world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X