நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா: '40 வயது' இளையராஜாவை கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை: #40YrsOfMaestroILAYARAJA என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
இசைஞானி இளையராஜா இசையமைக்கத் துவங்கி 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் இது குறித்து அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராஜாவின் இசையோடு வளர்ந்தவர்கள் நாங்கள் என பெருமையாக கூறுகிறார்கள்.
இந்நிலையில் #40YrsOfMaestroILAYARAJA என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
|
தாலாட்டு
பிறந்தது முதல் இவர் பாட்டை தான் கேட்கிறேன் ,, தாயின் தாலாட்டை விட அதிகமாக , #40YrsOfMaestroILAYARAJA என அன்சாரி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
|
பாட்டு
இசையமைப்பது என்னவோ 40 வருடங்கள் தான். ஆனால் இவரது இசை நிச்சயமாக இன்னும் 2000 ஆண்டுகள் கழித்தும் கேட்கப்படும்... #40YrsOfMaestroILAYARAJA என பென்சில் திருடன் ட்வீட் செய்துள்ளார்.
|
ராஜா
"நேற்று இல்லை..நாளை இல்லை...
எப்பவும் தான் நீ ராஜா"!
#40YrsOfMaestroILAYARAJA என கார்த்தி கூறியுள்ளார்.
|
சொத்து
தமிழனின் இசை சொத்து இசைஞானி. உங்கள் இசையின் தாலாட்டு வருகின்ற அனைத்து தலைமுறைக்கும் பயணித்துக் கொண்டே இருக்கும் #40YrsOfMaestroILAYARAJA என சுரேகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
இசை
இந்த பூமியில் உள்ள யாராவது ஒருவராலாவது அவரது இசையை வெறுக்க முடியுமா? #40YrsOfMaestroILAYARAJA என ப்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.