புதுவாழ்க்கை... உள்நாட்டுப் போரால் தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 46 அகதிகள் இலங்கைக்கு திரும்பினர்
இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்த 46 பேர் இன்று இலங்கை திரும்பியுள்ளனர்.
சென்னை: அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையகத்தினால் இலங்கைத் தமிழ் அகதிகள் 46 பேர், தமிழகத்தில் இருந்து இன்று காலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
1990ஆம் ஆண்டு, இலங்கையில் ஏற்பட்ட போரின் காரணமாக தமிழ் நாட்டில் தமிழ் அகதிகள் தஞ்சமடைந்தனர். அவர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள முகாம்களில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், இலங்கையில் போர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு ஒரு அமைதி சூழல் திரும்புவதால், பல்வேறு நாடுகளில் வாழ்ந்த அகதிகள் தாய் நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். கண்டி, கொழும்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் இருந்து தமிழகம் வந்து முகாம்களில் வசித்து வந்த 46 பேர் இன்று இலங்கை திரும்பியுள்ளனர்.
தமிழகத்திலுள்ள முகாம்களிலும், தனியார் வீடுகளிலும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இலங்கைக்கு மீள்குடியேற்றுவதற்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையகத்தின் ஆதரவுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. என்றாலும், மிகவும் குறைந்த அளவிலான அகதிகளே மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications