புதுவாழ்க்கை... உள்நாட்டுப் போரால் தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 46 அகதிகள் இலங்கைக்கு திரும்பினர்
இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்த 46 பேர் இன்று இலங்கை திரும்பியுள்ளனர்.
சென்னை: அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையகத்தினால் இலங்கைத் தமிழ் அகதிகள் 46 பேர், தமிழகத்தில் இருந்து இன்று காலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
1990ஆம் ஆண்டு, இலங்கையில் ஏற்பட்ட போரின் காரணமாக தமிழ் நாட்டில் தமிழ் அகதிகள் தஞ்சமடைந்தனர். அவர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள முகாம்களில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், இலங்கையில் போர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு ஒரு அமைதி சூழல் திரும்புவதால், பல்வேறு நாடுகளில் வாழ்ந்த அகதிகள் தாய் நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். கண்டி, கொழும்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் இருந்து தமிழகம் வந்து முகாம்களில் வசித்து வந்த 46 பேர் இன்று இலங்கை திரும்பியுள்ளனர்.
தமிழகத்திலுள்ள முகாம்களிலும், தனியார் வீடுகளிலும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இலங்கைக்கு மீள்குடியேற்றுவதற்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையகத்தின் ஆதரவுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. என்றாலும், மிகவும் குறைந்த அளவிலான அகதிகளே மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications