4ம் வகுப்பு மாணவி உள்பட இருவர் டெங்குவிற்கு பலி.. ராசிபுரத்தில் மக்கள் பீதி
ராசிபுரத்தில் பள்ளி மாணவி உள்பட இருவர் டெங்கு காய்ச்சலுக்கு இன்று பலியாகியுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சென்னை: ராசிபுரத்தைச் சேர்ந்த 4ம் வகுப்பு மாணவி மற்றும் பெண்மணி ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு இன்று பலியாகியுள்ளனர்.
ராசிபுரத்தைச் சேர்ந்தவர் புனிதசெல்வி. இவர் 4ம் வகுப்பு படித்து வந்தார். திடீரென இவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டதால் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதேப் போன்று ஆண்டியம்மாள் என்ற பெண்மணி ஒருவருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் இன்று உயிரிழந்தனர்.
இதனால் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த இருவரின் உறவினர்களும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அலட்சியப்போக்கு இருப்பதாகக் குற்றம்சாட்டினர். மேலும், நகராட்சியின் சுகாதார சீர்கேடே இது போன்ற உயிரிழப்பிற்குக் காரணம் என அவர்கள் புகார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications